இலங்கை தமிழர் நலனுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11.90 லட்சம் ரூபாய் வழங்கிய சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள்

சென்னை: இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11.90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் சார்பில் முதற்கட்டமாக 11 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர். பாலு, திரு. ஆ. ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பூச்சி எஸ். முருகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன், மாமன்ற நிலைக்குழு தலைவர் திரு. என். சிற்றரசு, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு. ந. இராமலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Related Stories: