தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் குறைந்து 81.18 ஆக சரிவு..!!

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 81.18 காசுகளாக சரிவை கண்டுள்ளது. இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. புதன் அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. மேலும் நேற்றைய தினமும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாக சரிந்தது.

இந்நிலையில் இன்றும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகளாக குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 2-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,493 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 175 புள்ளிகள் சரிந்து 17,453 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: