நம்பென்: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல்-பாட், இயங்சரே, நுவான்சியா, கியூ சம்பான் ஆகியோர் கடந்த 1975-79ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது, 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஐநா.வின் முயற்சியால் இவர்கள் 4 பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல், போர்க்குற்ற விசாரணை நடந்து வந்தது. இதில், போல்-பாட் (87) 1998ல் இறந்தார்.