நாக்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 200க்கு மேல் ரன் குவித்தும் ஆஸியிடம் 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் 2வது டி20 ஆட்டம் இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் இரு அணிகளிலும் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்ததால் முதல் வரிசை ஆட்டக்காரர்கள் மாற்றமின்றி விளையாடுவார்கள். அதே நேரத்தில் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரு அணிகளிலும் மாற்றம் இருக்கலாம்.