×

பருப்பு உருண்டைக்குழம்பு

செய்முறை:

உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களைச் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.குறிப்பு: உருண்டைகளை எண்ணெயில் பொரித்தும் போடலாம்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்