செய்முறை:
கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு, டால்டா, சேர்த்து நன்கு பிசிறி வைத்துக்கொள்ளவும். தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பிசிறி வைத்துள்ள பக்கோடா மாவை எடுத்து உதிர்த்து போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த இந்த பக்கோடா வத்தக்குழம்பு மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்றது.