செய்முறை :
புதினா, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் இவைகளை நன்கு விழுதாக அரைத்து அதில் உப்பு சேர்த்து, அதனை கோதுமை மாவில் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும். இதனை சிறு சிறு பூரிகளாய் இட்டு வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். சுவையான புதினா வாசனையுடன் அருமையான பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.