எப்படிச் செய்வது?
புளித்த மோரில் உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் கொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆவியில் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.