கும்பகோணம்: கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவில் பிரபல ரவுடி வினோத்குமார்(45) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடி வினோத்குமார் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாதுளம்பேட்டை தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்த அவரை மர்மநபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடினர்.