சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவில் 121 மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்றனர். முதல்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.