திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக் கழகத்தில் மலையாளம் இணை பேராசிரியர் பணிக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசும் பங்கேற்றார். பல்கலைக் கழக விதிகளின்படி, தகுதிப் பட்டியலில் இவர் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், நேர்முகத் தேர்வுக்குப் பிறகு வெளியான ரேங்க் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்க பல்கலை.யின் சிண்டிகேட் தீர்மானித்தது. இதை நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களும், சில சிண்டிகேட் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர்.