சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் நலத்திட்டங்களை நேரில் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 23ம் தேதி விமானம் மூலம் கோவை சென்று, அன்று இரவு கோவையில் தங்குகிறார். பின்னர் 24ம் தேதி கோவையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.