இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த வாரம் வெளியேறினார். பின்னர் நிதிஷ் குமார் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘நான் வெளிநாட்டிற்குச் சென்றேன். அங்குள்ள பெண்கள் எந்த நேரத்திலும் தங்கள் காதலனை மாற்றிக்கொள்வார்கள் என்று ஒருவர் என்னிடம் கூறினார்.