புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு (64), கடந்த ஜூலை 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளராக ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. இவர் 1987ம் ஆண்டு ஒடிசா கேடர் இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி ஆவார்.