விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணமால் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். கடந்த ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஓராண்டாக நடந்து வருகிறது.