×

ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி சேவை, விரைவில் தொடங்கப்பட உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடந்தது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்தன. இதில், ஏர்டெல் நிறுவனம் இந்த மாதமே 5ஜி சேவையை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

முதலில் ஒரு சில நகரங்களில் மட்டுமே தொடங்கப்படும் ஏர்டெல் சேவை, 2024க்குள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என கூறியுள்ளது. ஜியோ நிறுவனமும் ஆயிரம் முக்கிய நகரங்களில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெட்வொர்க் வலைதளமான கூவில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில்,‘5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு கடிதம் வியாழன்று வழங்கப்பட்டு விட்டது. விரைவில், 5ஜி அறிமுகத்துக்கு தயாராக இருங்கள்,’என்று கூறியுள்ளார்.

Tags : Union , Letter to Bidders, Prepare for 5G Service; Union Minister Notification
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...