ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் டிரோன் மூலம் அனுப்பிய வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறுகையில்,‘‘ஜம்முவின் ஆர்னியா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி டிரோன் மூலம் வெடிபொருட்கள் போடப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஒரு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையின் போது, ஒரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது அலி உசைன் என்ற காசிமுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரிந்தது.