ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராய்சார் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (32). இவர் அதே ஊரை சேர்ந்த நபருக்கு ரூ.2.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதை திரும்ப கேட்டதாக தெரிகின்றது. இது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி தனது 6 வயது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அனிதாவை அந்த கும்பல் வழிமறித்துள்ளது. அச்சமடைந்த அனிதா அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்று, போலீசுக்கு அவசர எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் வரவில்லை.