கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களுக்கு தீர்வு காண்பதுதான், அந்த மாபெரும் புரட்சியாளனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.