கடலூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையாகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூரில் நேற்று நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: அதிமுக தலைவராக நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கை வைத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி.