ஐதராபாத்: தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த படம் 40 வருடம் கழித்து திரைக்கு வர உள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் என்.டி.ராமராவ். நாகேஸ்வர ராவ். இதில் நாகேஸ்வர ராவ் நடித்த பிரதிபிம்பலு என்ற படம் கடந்த 1982ல் வெளியாக இருந்தது. இதில் ஜெயசுதா ஹீரோயினாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் அப்போது திரைக்கு வரவில்லை. தொடர்ந்து படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தும் கைகூடவில்லை. இதனால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் 40 வருடம் கழித்து இந்த படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் ரிலீசாகிறது.