புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக தவறான, அவதூறு செய்திகளை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கி உள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 கீழ் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யூடியூப் சேனல், இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இவை 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டவை.