வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தமிழகத்தில் இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர்  பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த 1ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடந்து வருகிறது. அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது NVSP, VHA என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை (8 மாதம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே வீட்டுக்கு நேரடியாக வந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, வாக்காளர்களின் பெயர் விவரங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இதுவரை 37 லட்சத்து 81 ஆயிரத்து 498 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 6.08 சதவீதம். இவர்களில் 90%பேர் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றார்.

Related Stories: