சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கக்கோரிய வழக்கு நேற்று சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் சார்பாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி கடும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசி கலவரத்தை தூண்டிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: