விழுப்புரம்: மாஜி சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான பாலியல் புகார் வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிந்தநிலையில், சாட்சிகள் விசாரணை நடக்கிறது. நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில், அரசுதரப்பு சாட்சிகளான செங்குறிச்சி, விக்கிரவாண்டி, பரனூர் ஆகிய மூன்று சுங்கச்சாவடியைச் சேர்ந்த 5 ஊழியர்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து அவர்களிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்குவிசாரணை செய்தனர். பின்னர் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.