அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மதுராந்தகம்: தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர், மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு  ஒரு லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள ஜே.ஜே.அறக்கட்டளை சார்பில், பள்ளி  மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.  அறக்கட்டளையின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவிற்கு  அறக்கட்டளை நிறுவனர் ஜெர்லின் ஜோசப் தலைமை தாங்கினார்.

இதில், தனியார் கல்லூரி முதல்வர் சுபத்திரா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள், சமூக ஆர்வலர் தமிழ் விரும்பி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, மதுராந்தகம் நகருக்கு உட்பட்ட 12 மற்றும் 13வது வார்டுகளை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோன்று, நலிவடைந்த குடும்பத்திற்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் என ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: