ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு...

சென்னை: ஆர்டர்லி முறை ஒழிப்பு வழக்கில் அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இன்று அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காவல் துறையில் பணி புரிகின்ற காவலர் ஒருவர் குடியிருப்பை காலி செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால் நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆடர்லி வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார். ஆடர்லியை வைத்திருக்க கூடாது என்ற தமிழக உள்துறைக்கு முதன்மை செயலாளர் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த விசாரணையின் பொது உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது ஆர்டர்லி விவகாரத்தில் மிகபெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ததாக நீதிபதி தெரிவித்தார். அப்போது கூறிய நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், ஒருசில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லஎண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை தான். ஆனால், மக்களின் வரி பணம் வீணாவது கவலையளிக்கிறது என தெரிவித்ததுடன், தங்களுக்கும் வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால் ஆர்டர்லிக்களும் புகார் தெரிவிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருவது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு காவல்துறை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.  

மேலும், பெருபாலான ஆர்டர்லி திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல்துறை பணியை தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லி இல்லை என மாவட்ட எஸ்.பி.கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக டி.ஜி.பி. தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லி முறையை பயன்படுத்த கூடாது எனவும், உயர் அதிகாரிகளுக்கு தேவைபட்டால் இருப்பிட உதவியாளர்கள் நியமித்து கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆர்டர்லி வழக்கில் விசாரணை ஆகஸ்ட் 23 தேதி இறுதி உத்தரவு     

பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.

Related Stories: