பியோங்யாங்: ஒரே நாளில் இரண்டு அதிநவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பொருளாதார தடைகளை திரும்ப பெறுவதற்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்து வருகிறது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவுடன் அமெரிக்க படைகள் இணைந்து கொரிய கடல் பகுதியில் அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சிகளையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அடுத்த வாரம் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இரு நாடுகளும் சமீபத்தில் அறிவித்திருந்தன.