பல்லாவரம்: பள்ளி மாணவி குளிப்பதை மறைந்து இருந்து ரகசியமாக செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு காமதேனு நகர் பகுதியை சேர்ந்தவர் ராம் (26). தனியார் நிறுவனத்தில் ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் உடை மாற்றுவதை ராம் தொடர்ந்து ஜன்னல் வழியாக மறைந்து இருந்து பார்த்து ரசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றும் அதேபோல் மாணவியின் அழகை ஜன்னல் வழியாக பார்த்து ரசித்தவருக்கு, திடீரென விபரீத ஆசை தோன்றியது. உடனடியாக தனது செல்போனை எடுத்து, அதில் மாணவி உடை மாற்றுவதை படம் பிடிக்க தொடங்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக செல்போனில் இருந்து பிளாஷ் லைட் அடிக்கவே, சுதாரித்துக் கொண்ட மாணவி திரும்பி பார்க்கையில், ராம் படம் எடுத்துக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராமை நேற்று கைது செய்தனர்.