வீட்டில் 29 சவரன் தங்க நகை மாயம்

திருவொற்றியூர்: எண்ணூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானம்(62), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி(58), இவர்களது மகள் ஜெயந்தி(30), கண்பார்வை இல்லாதவர். ஜெயந்தி கீழ் தளத்தில் கணவர் ரஞ்சித்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கிருஷ்ணவேணி புறப்பட்டார். அப்போது நகைகளை அணிந்து செல்ல வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 29 சவரன் பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: