புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான பவன் காஜல், லக்விந்தர் ரானா ஆகியோர் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முன்னிலையில் நேற்று பாஜ.வில் சேர்ந்தனர். ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும். ஆனால், வரும் தேர்தலில் இந்த நடைமுறை மாறி பாஜ.வே மீண்டும் ஆட்சி அமைக்கும்,’’ என்றார்.