சென்னை: அதிமுக அலுவலக சாவி தொடர்பான மேல்முறையீட்டு மனு வரும் 19ம் தேதிக்குள் (நாளை) பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் எழுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார்.