சென்னை: எழுத்து அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவல்களுக்கான பரிசு தொகையை ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத் தளத்தில் புதுமைகளை மிளிரச் செய்யவும், தமிழ் இலக்கியம் மேன்மையுறத் தொண்டாற்றவும் ”எழுத்து’ என்ற இலக்கிய அமைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடங்கி நடத்தி வருகிறார். செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா, ப.சிதம்பரம் ஆகியோர் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களாக உள்ளனர். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுத்து தமிழிலக்கிய அமைப்பு செயல்பட்டு வருகிறது.