ஊட்டி: இரண்டாம் சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.ஊட்டியில் இரு சீசன்கள் அனுசரிக்கப்படுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மாதம் வரை இரண்டாம் சீசனாகவும் அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசனில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளதால், அப்போது பல்வேறு கண்காட்சிகள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை கண்டு சுற்றுலா பயணிகளும் மகிழ்கின்றனர். இரண்டாம் சீசனில், முதல் சீசன் போன்று விழாக்கள் அதிகளவு நடத்தப்படுவதில்லை. அதே சமயம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறு மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்படுகிறது. இம்முறை 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.