தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் தேனி, சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் நாளை கனமழை பெய்யக்கூடும். இதேபோல் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 19 முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: