திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள மயானத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சடலங்களை எடுத்துச் சென்று எரிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் கடந்த 15ம் தேதி நடைபெற்ற கிராம சபாக் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிராம சபா கூட்டத்தில் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய ஆணையாளர் மற்றும் திருப்போரூர் வட்டாட்சியருக்கு அதன் நகல் அனுப்பி வைக்கப்பட்டது.