மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள மயானத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சடலங்களை எடுத்துச் சென்று எரிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் கடந்த 15ம் தேதி நடைபெற்ற கிராம சபாக் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கிராம சபா கூட்டத்தில் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய ஆணையாளர் மற்றும் திருப்போரூர் வட்டாட்சியருக்கு அதன் நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள், ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தரணி ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீட்டை இடித்தனர்.

Related Stories: