சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது

புழல்: சோழவரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சோழவரம் அடுத்த கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று அருகில் உள்ள பள்ளிக்கு சென்றாள். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தனது மகளை தேடினார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து ராஜா (34) என்பவர் வீட்டில் இருந்து சத்தம் போட்டபடியே அச்சிறுமி ஓடிவந்தாள்.

இதைப்பார்த்த சிறுமியின் தாயார் `ஏன் ஓடி வந்தாய்’என கேட்டார். அப்போது, அச்சிறுமியிடம் ராஜா தகாத முறையில் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சோழவரம் போலீசார் ராஜாவை போக்சோவில் கைது செய்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: