புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளம்(45). இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டு வந்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரனை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதேபோல் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பெருமாள்(48) இவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூத்துக்குடி சென்றிருந்த நிலையில், மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.