ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று மற்றும் புயல் எச்சரிக்கையால், கடந்த 12 நாட்களாக மீன்பிடிக்க செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் கடற்படை கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகுகளை வழிமறித்து தடுத்து விரட்டியடித்தனர்.