மதுரை: நீர்நிலையில் தகன மேடை அமைப்பதாக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த பால்பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேரில் கண்மாய் உள்ளது. இப்பகுதியின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. நீர்நிலைப்பகுதியில், உள்ளாட்சி சார்பில் தகன மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.