குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: நாளை முதல் நடக்கிறது

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை  இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 18ம் தேதி(நாளை)முதல்  நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும். 9361566648, 8072584856 என்ற  எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, இப்போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: