×

செட்டிநாடு கேரட் குழிப்பணியாரம்

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பிறகு இட்லி மாவுடன் தாளித்த கலவையை சேர்த்து கலக்கவும். இதனுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றி அதன் மேல் கேரட் துருவலை தூவி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான செட்டிநாடு கேரட் குழிப்பணியாரம் தயார்.

Tags : Chettinad ,
× RELATED வேதியியல் பயன்பாட்டில் நவீன இந்திய உணவுகள்