கிருஷ்ணகிரி : எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்தில் ஓலா நிறுவனம் மும்பரமாக உள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிக பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய உள்ளது. ஓலா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் வெளியிட்ட செய்தியில் 2024ஆம் ஆண்டு ஓலாவின் முதல் மாடல் எலக்ட்ரிக் கார் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 2026 அல்லது 2027ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 10 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு கொண்டுளோம் என்றும் அவர் தெரிவித்தார்.