ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புட்காம் மற்றும் நகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு கையெறி குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக புட்காம் மாவட்டத்தின் சதுராவில் உள்ள குடியிருப்பு மீதும், நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மீதும் கையெறி குண்டு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். புட்காமின் கோபால்போரா சதுரா பகுதியில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டில் கரண் குமார் சிங் என்பவர் காயமடைந்தார்.