சென்னை: புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாக கூறி, நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தார். அதில், அந்தாண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு வருமான வரி துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதில், புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடியை வருமானத்தை கணக்கில் காட்டவில்லை’ என கண்டறிந்தது.