துபாய்: சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு தொடர்பில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாத்தானின் கவிதைகள் என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய சல்மான் ருஷ்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனை அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை ஹதி மட்டார் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதில் ருஷ்டியின் கை நரம்பு, கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. தற்போது ருஷ்டி மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரான் மீது சில நாடுகள் குற்றம்சாட்டின.