மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறி கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் யாருக்கோ குறுந்தகவலை அனுப்பி கொண்டிருந்தார். மற்றவருடனான அந்த சாட்டிங்கில் சக பயணி தன்னை ஒரு வெடிகுண்டு வைத்திருக்கும் நபர் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த அருகில் இருந்த பெண் பயணி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு அவர் தகவல் அளித்தார். கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் புறப்பட இருந்த விமானத்தை நிறுத்தி வைத்தனர்.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.