மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, கிர்கானில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதில் பேசிய மர்மநபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலை 10.30 மணியளவில் தொடர்ந்து நான்கு முறை தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மும்பை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.