சீர்காழி: சீர்காழியில் பாரம்பரிய நெல்திருவிழா நேற்று நடந்தது. இதில் 150 வகையான நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் 8ம் ஆண்டு விழா சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறுதானியங்கள், இயற்கையான பழங்கள் பயன்படுத்தி ரசாயன கலப்படமற்ற ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தனர்.