பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (15ம் தேதி) சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நகர், கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றப்படுகிறது. 75-வது சுதந்திர தினம் என்பதால், இந்திய நாட்டின் பெருமையை உணத்தும் வகையில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் மூவர்ண கொடியேற்றப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்திய சுதந்திரம் அடைவதற்கு காரணமான தியாகிகள் குறித்து, தேசபற்று மிக்க பல எதியாகிகளின் புகைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.